Updated in 2020-Nov-28 08:11 AM
இந்தியா மீது சீனாவின் புதிய பழி... கொரோனா இந்தியாவில் இருந்தே சீனாவுக்கு வந்ததாக புதிய பழியை அந்நாடு போட்டுள்ளது.
ஏற்கனவே இத்தாலி, அமெரிக்கா, ஐரோப்பா என 8 நாடுகள் மீது எந்தவித ஆதாரமும் இல்லாமல் பழி சுமத்திய சீனா தற்போது இந்தியாவில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவியதாக தெரிவித்துள்ளது.
மாசுபட்ட தண்ணீரால் வூகான் வரை பரவியதாக சீனா கூறியுள்ளது. சீனாவின் நாளிதழ் ஒன்றில் வெளியான இந்த ஆய்வு முடிவு அபத்தமானது என்று கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் நிபுணர் டேவிட் ராபர்ட்சன் நிராகரித்துள்ளார்.